×

ராசிபுரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ பிடித்து சாம்பல்

ராசிபுரம், மார்ச் 15: ராசிபுரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில், மின் கம்பி உரசி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு, திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு, லாரி வந்துகொண்டிருந்தது. லாரியை ராசிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்(35) என்பவர் ஓட்டி வந்தார்.

கவுண்டம்பாளையம் அருகே வந்த போது, லாரியின் மேல் புறத்தில் இருந்த மின்கம்பி உரசியதில், எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இது தெரியாமல் டிரைவர், லாரியை ஓட்டி வந்தார். சிறிது நேரத்தில், லாரியில் இருந்த வைக்கோல் கொழுந்து எரிவதை பார்த்த அவர், லாரியை சாலையோரமாக இருந்த வயல்வெளியில் இறக்கினார். அப்போது லாரியில் இருந்த வைக்கோல் மளமளவென பற்றி எரிந்து, லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், லாரியில் இருந்த 4 டன் வைக்கோல் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து