×

ராசிபுரத்தில் பிளாஸ்டிக் கேரி

பேக்குகள் பறிமுதல்ராசிபுரம், மார்ச் 15: ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில், நகராட்சி அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சிக்கு உட்பட்ட மளிகை கடை, பேக்கரி கடை, உணவு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் உள்ளிட்ட 25 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து, கடை காரர்களிடம் ₹5ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால், நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து