×

3 பேர் குண்டாசில் கைது

சிவகங்கை, மார்ச் 10:  மறவமங்கலத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த பிப்.4அன்று காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் 5 பேரை கைது செய்தனர். இக்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மறவமங்கலத்தை சேர்ந்த அமர்த்தியாபாண்டியன்(17), அருண்குமார்(24), சிறியூரை சேர்ந்த செல்லப்பாண்டி(24), ஆகியோரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய எஸ்பி செந்தில்குமார், கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது