×

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் மஞ்சு விரட்டு மார்ச் 15ல் நடக்கிறது

கீழக்கரை, மார்ச் 10:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில், வரும் 15ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்த கால் நடும் விழா மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ,ஒன்றிய தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் நாகேஷ்வரன். கிழக்கு மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு மாவட்ட கவுன்சிலர் கார்த்திகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ஜெய முருகன் வரவேற்றார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கருத்தமுத்து. சிவசுப்பிரமணியன். கோவிந்த மூர்த்தி சக்தியேந்திரன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தன், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் தமிமுன் அன்சாரி, துணை செயலாளர் வீரஜோதி ராஜன், பாலமுருகன் மற்றும் திருப்புல்லாணி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thirupullani ,Chief Minister ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...