×

சாயர்புரம் பேரூராட்சி தலைவராக பாக்கியலெட்சுமி தேர்வு

ஏரல், மார்ச்5: சாயர்புரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 7, காங். 4 இடத்திலும் வெற்றி பெற்றது. மேலும் சுயேச்சைகள் 3, அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது.  தலைவருக்கான தேர்தலில் சாயர்புரம் நகர திமுக பொறுப்பாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான அறவாழியின் மனைவி பாக்கியலெட்சுமியும், துணைத்தலைவருக்கான தேர்தலில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை மனைவி பிரியாமேரியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாக்கியலெட்சுமியையும், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரியாமேரியையும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், புதிய கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Pakkiyaletsumi ,Sayarpuram ,
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்