×

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு

தேன்கனிக்கோட்டை, மார்ச் 5: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு, 18வது வார்டு கவுன்சிலர் பேரூர் செயலாளர் சீனிவாசன் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்தது. நேற்று காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர் சீனிவாசனை எதிர்த்து, யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மஞ்சுநாத் அறிவித்தார்.

அதேபோல், மாலை 3 மணிக்கு நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கு, 9வது வார்டு திமுக கவுன்சிலர் அப்துல்கலாம் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் பேட்டியிடாததால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் மஞ்சுநாத் அறிவித்தார். பேரூராட்சி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் அப்துல்கலாம் ஆகியோருக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தளி ஒன்றிய குழுதலைவர் சீனிவாசலுரெட்டி, கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் வேனில் ஊர்வலமாக சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : Deputy Chairman ,Tenkanikottai ,Municipality ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...