×

சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு

சிங்கம்புணரி, மார்ச் 5: சிங்கம்புணரி  தேர்வுநிலை பேரூராட்சி சேர்மன் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் தலைவர் பதவிக்கு அம்பலமுத்து மனு  செய்தார். இவர் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டில் சேர்மனாக பதவி வகித்தார்.  தற்போது இரண்டாவது முறையாக சேர்மன் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.  அவருக்கு அனைத்து வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அம்பலமுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக  தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான் முகமது அறிவித்தார். இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக  சார்பாக இந்தியன் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து  பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செய்தனர். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  

இதில், திமுக  ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், பாலசுப்பிரமணியன், செல்வராஜ், பொதுக்குழு  உறுப்பினர் சோமசுந்தரம், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர அவைத்தலைவர்  சிவக்குமார், நகர பொருளாளர் கதிர்வேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்  ஆனந்த கிருஷ்ணன் செல்வகுமார், கழக பிரமுகர்கள் குடோன் மணி, புகழேந்தி,  ஒன்றிய இளைஞரணி மனோகரன், ஞானி செந்தில், வார்டு உறுப்பினர்கள் முகமது நிசா,  ஜெயசித்ரா, சத்யா, மீனா, ஜெயக்குமார், தனசேகரி, அலாவூதீன், மணிசேகரன்,  செந்தில் கிருஷ்ணன், இந்தியன்செந்தில் குமார், ராமலட்சுமி, ராஜா, திவ்யா  ஜெயபாக்கியம், தாயுமானவன், சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : Singampunari ,vice chairman ,
× RELATED போலி மதுபான ஆலையில் 3,020 லிட்டர் ஸ்பிரிட் 500 மது பாட்டில் பறிமுதல்