×

5 பேரூராட்சிகளிலும் திமுக சேர்மன்கள் காரைக்குடி தாலுகாவில்

காரைக்குடி, மார்ச் 5:  காரைக்குடி தாலுக்காவுக்கு உட்பட்ட கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர், புதுவயல் என 5 பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றி உள்ளது. காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் கேஎஸ்.கார்த்திக்சோலை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரிஅழகப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயல்அலுவலர் கவிதா பதவிபிரமாணம் செய்துவைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

புதுவயல் பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முகமதுமீரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக பகுருதீன்அலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பள்ளத்தூர் பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட சாந்தி சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவராக ராமருக்மணி வெற்றி பெற்றுள்ளார். செயல்அலுவலர் உமாமகேஸ்வரன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ராதிகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக சோலைராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயல்அலுவலர் ரமேஷ்பாபு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

கண்டனூர் பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட சங்கீதாசெல்லப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக மீனாள் வெற்றி பெற்றுள்ளார். செயல்அலுவலர் பெலிக்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : DMK ,Karaikudi taluka ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி