பீளமேடு, மார்ச் 5: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் கல்பனா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர், பதவி ஏற்றவுடன் கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளி கழிப்பிடம் கட்டித்தர முதல் கையெழுத்திட்டார். இதுதொடர்பாக, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி பீளமேடு பகுதி ம.தி.மு.க. சார்பில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை ஏற்று, கழிப்பிடம் கட்டித்தர முதல் கையெழுத்திட்ட மேயருக்கு 26-வது வார்டில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி நன்றி தெரிவித்தார்.