×

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

பட்டுக்கோட்டை, மார்ச் 5: ஏனாதி ராஜப்பாவின் 45ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, மதுரைஅரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது. முகாமிற்கு ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 110 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் 130 யூனிட் ரத்தம் பெறப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், டாக்டர் ராதிகாமைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை ரோட்டரி கிளப் செயலாளர் ரெஜினால்டு செல்வகுமார் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியர்களும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

Tags : Enathi Rajappa College ,Pattukottai ,
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்