கடலூர், மார்ச் 5: மாநில அளவிலான டென்னிஸ் போட்டி காஞ்சிபுரம் மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் சார்பில் நடந்தது. இதில், 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் தமிழ்விழி முதலிடமும், 18 வயதிற்குட்பட்ட பிரிவில் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் தமிழ்விழி முதலிடமும் மற்றும் பிரணவ்ராஜ் சிறந்த டென்னிஸ் வீரருக்கான விருதையும் பெற்றனர். பதக்கம் வென்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், ராஜேஷ், விஜயசாந்தி ஆகியோரையும் சி.கே கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அமுதவள்ளி ரங்கநாதன், பள்ளி முதல்வர் திவ்யாமேரி, மனிதவள மேலாளர் குமாரி லீலம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.