ஈரோடு, மார்ச் 4: ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (5ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார் மேடு முழுவதும், 46 புதூர் (19 ரோடு பகுதி மட்டும்), சாஸ்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.