×

பொய்யாத நல்லூரில் பிரத்தியங்கராதேவி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மகா சண்டியாகம்

அரியலூர், மார்ச் 4: அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவிக்கு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மகா சண்டியாகம் நடைபெற்றது.ஒவ்வொரு மாதமும் அமாவாசையிலும் மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். யாகத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் மற்றும் வேண்டுதலுக்காக மூட்டை மூட்டையாக மிளகாயை கொட்டுவார்கள்.மேலும் மஞ்சள் குங்குமம் ஜாதிக்காய் வசம்பு கடுக்காய் ரோஜா இதழ்கள் ஆரஞ்சு ஆப்பிள் திராட்சை செவ்வாழை ஆகியவற்றை யாகத்தில் போட்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.மாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Maha Chandiyagam ,Prithviyankaradevi Temple ,Poyyatha Nallur ,
× RELATED திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற...