×

திருக்கடையூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் மயான கொல்லை நிகழ்ச்சி

தரங்கம்பாடி, மார்ச் 4: திருக்கடையூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நடந்த மயான கொல்லை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் கீழவீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் மயான கொல்லை நிகழ்சி நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இக்கோயிலில் நடந்த மயான கொல்லை நிகழ்ச்சியையொட்டி அங்காள பரமேஸ்வரிக்கு 4 கால அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து கரக புறப்பாடு நடந்தது. பக்தர்கள் காளி வேடம் அணிந்து காளியாட்டம் ஆடி 4 வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில் ஏராளமான பக்தக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையார் போலீசார் செய்திருந்தனர்.

Tags : Angalaparameswari Temple ,Tirukkadaiyur ,
× RELATED வழுதூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்