×

மாப்பிள்ளை கையை வெட்டிய மச்சான்

கூடலூர், மார்ச் 3: தேனி மாவட்டம் கூடலூர் 4வது வார்டு சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா மகன் அரவிந்த்(33). சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அரவிந்துக்கும் இதே ஊரை சேர்ந்த சிவாஜி மகள் சீனாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்  உள்ளனர்.
இந்நிலையில் அரவிந்த் குடும்பத்தாருக்கும் அவரது மனைவி குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிவாஜி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்குச் சென்று அவதூறாக பேசினார்களாம். அதை அரவிந்த் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரவிந்த்தை வெட்ட முயன்றார்.

அரவிந்த் இடது கையால் தடுக்கவே, அரிவாள் இடது கை மணிக்கட்டை துண்டித்தது. மேலும் தடுக்க முயன்ற ராஜாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் ஸ்டாலின், சிவாஜி ஆகியோர் தப்பி ஓடினர். தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அரவிந்துக்கு கம்பம் அரசு மருத்துவமனை மூலம் முதலுதவி சிகிச்சை செய்து, மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு துண்டித்த கையை இணைக்கும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரிவாளால் வெட்டிய  சிவாஜி, அவர் மகன் ஸ்டாலின் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : Machan ,
× RELATED கறம்பக்குடி அருகே மத...