திருப்புத்தூர், மார்ச் 3: திருப்புத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 14 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி சார்பிலும், கட்சியினர் சார்பிலும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 9 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கணேசன், வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இளையான்குடி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் 10 திமுக, 2 காங்கிரஸ், 1 அதிமுக, 1 அமமுக,4 சுயேட்சை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.