சோமனூர்,மார்ச்3: புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் நேற்று ஏற்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பேரூராட்சியை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சட்டசபை மானியக் கோரிக்கையின் போது நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 14 பெண் உறுப்பினர்களும், 13 ஆண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட 19 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியில் இருவரும், சுயேச்சை மூன்று உறுப்பினர்களும், அதிமுகவில் மூன்று உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நகராட்சி அலுவலகத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது ஆணையர் முத்துசாமி ஒவ்வொரு வார்டு கவுன்சிலர் பதவி பிரமாணம் செய்து வைத்து உறுதிமொழி ஏற்பு வைத்தார். நாளை தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.