×

சாத்தூர் அருகே ரூ.60 ஆயிரம் பட்டாசுகள் பறிமுதல் ஆலை உரிமையாளர் மீது வழக்கு

சாத்தூர், மார்ச் 2: சாத்தூர் அருகே, உரிய அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சாத்தூர் அருகே, எலுமிச்சங்காய்ப்பட்டி கிராமத்தில் உள்ள லட்சுமி பயர் ஒர்க்ஸில், கங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் நேற்று சோதனை செய்தனர். அப்போது உரிமத்தின் விதிமுறைகளை மீறி எளிதில் வெடிக்க கூடிய பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் பால்பாண்டி, மேலாளரான புஷ்பம் ஆகியோர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.60ஆயிரம் மதீப்புடை பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Sattur ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை