×

பூ வியாபாரி பலி

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (53), பூ வியாபாரி. இவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இருமகள்களுக்கு திருமணமாகி, அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இதனால், கருப்பசாமி தனியார் வசித்து வந்தார். மகா சிவாரத்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் போடி மயானச் சாலையில் உள்ள 30 அடி உயர வில்வமரத்தில் ஏறி இலை பறித்தார். அப்போது தவறி விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததாக தெரிவித்தனர். மகள் சரண்யா கொடுத்த புகாரின்பேரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Florist ,
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...