×

பேரையூர், சாப்டூரில் நாளை மின்தடை

திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தகவல்: பேரையூர் மற்றும் சாப்டூர் துணை மின்நிலையங்களில் நாளை மார்ச் 3ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் பேரையூர், பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Peraiyur ,Saptur ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி