×

குண்டாசில் ஒருவர் கைது

திருப்பூர், மார்ச் 2: திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம் பாரதி நகரை சேர்ந்த சுதா என்ற பெண்ணை, அவரது வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்தது. மேலும், பணப்பிரச்சினையில் அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பழனிகுமார் (39) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பழனி குமார் மீது ஏற்கனவே 2 வழக்கு உள்ளது. தொடர்ந்து பழனிகுமார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு ஆணையிட்டார். அதனடிப்படையில் கோவை சிறையில் உள்ள பழனிக்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது