×

பந்தலூர் அருகே மாணவர்களுக்கு கால்பந்து போட்டி

பந்தலூர், மார்ச் 2: பந்தலூர் அருகே தாளூரில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் மாவட்டத்தின் 12 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இறுதிப்போட்டியில் குன்னூர் புனித ஜோசப் பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஷித்கசாலி, முதல்வர் சிராஜூதீன், கால்பந்து பயிற்சியாளர் சத்தியன், உடல் கல்வி இயக்குனர் செரில்வர்கீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pandharpur ,
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...