×

மடத்துப்பட்டியில் நூலகம் அமைக்க ரூபி மனோகரன் எம்எல்ஏ உதவித்தொகை

நெல்லை, மார்ச் 2: கிராமப்புற மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், மடத்துப்பட்டி கிராமத்தில் நூலகம் அமைய தனது சொந்தப் பணத்தில் இருந்து உதவித் தொகையை நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ வழங்கினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி பஞ்சாயத்தில் உள்ள மடத்துப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், நூலகம் அமைத்துத் தருமாறு, தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்எல்ஏ தனது சொந்தப் பணத்தில் இருந்து, மடத்துப்பட்டியில் கிராம நூலகம் அமைப்பதற்கும், நூலகத்திற்குத் தேவையான நூல்களை வாங்குவதற்கும் உதவித்தொகை வழங்கினார். மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இந்த உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளை. கிழக்கு வட்டார தலைவர் சங்கரப் பாண்டியன், மடத்துப்பட்டி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜாண் தாமஸ் மற்றும் மடத்துப்பட்டி கிராம இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ruby Manokaran ,MLA ,Madathupatti ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...