×

திரளான பக்தர்கள் தரிசனம் வழிப்பறி வழக்கில் கைதானஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உள்பட 4 பேர் குண்டாசில் கைது

பெரம்பலூர்,மார்ச்.2: பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் வழிப்பறி வழ க்கில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உள்பட 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, தெரணி பாளை யம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் சதாசிவம்(50), இவரது மகன் கள் பழனிசாமி (27),தர்ம ராஜ்(25) மற்றும், மயிலாடு துறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கார்கோவில் கிராமம், தைலம்மை புரத் தைச் சேர்ந்த தங்கதுரை மகன் தருண்(21). இவர்கள் 4பேர்களும் பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் போ லீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, லால்குடி தாலுக்கா அகரம்-பெருவளப்பூர் செல்லும் சாலையில் வனப் பகுதியி ல் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களை பெர ம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ்கு மார் தலைமையிலான மரு வத்தூர், பாடாலூர் போலீ சார் பிடித்து கைதுசெய்து சிறையிலடைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் உள்ளிட்ட இந்த 4பேர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏ ற்ற மாவட்டக் கலெக்டர்  வெங்கட பிரியா நேற்று (1 ம்தேதி) 4குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறை யில் அடைக்க உத்தரவிட் டார். நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சிற ப்பாக பணிபுரிந்த பாடாலூ ர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் ஏட்டு கோவிந்தசாமிஆகியோரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி பெரிதும் பாராட்டினா ர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது