×

கரூர் தாந்தோணிமலையில்

கரூர், மார்ச் 2: கரூர் தாந்தோணிமலையில் பிரதான சாலையில் இருந்து தாந்தோணிமலை காவல் நிலையம், கல்யாண வெங்கரமண சுவாமி கோயில் உட்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது.
இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அதன் முன்பாக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடித்து வாகனங்கள் சீராக செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து வாகனங்கள் எளிதில் செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur ,Thanthonimalai ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...