×

வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 14ம் ஆண்டு விளையாட்டு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 14வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.  இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்பி அரவிந்தன்,  தனியார் வங்கி மேலாளர் ஷான்ஆதம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சாந்தி, அஹிம்சா,  தர்மம், சத்யா என்ற வரிசையில் மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் கண்ணைக் கவரும் கூட்டு பயிற்சிகளும் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

அதில், அணிவகுப்பில் சத்யா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெற்ற சாந்தி அணிக்கு கோப்பைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில்,  வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா,   பொருளாளர் சுரேஷ் கன்காரியா, பள்ளி முதல்வர்  வி.சி.கோவிந்தராஜன்   உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவி ரித்திகா நன்றி கூறினார்.

Tags : 14th Annual Sports Festival ,Vidyasagar Global School ,
× RELATED வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு விழா