×

புதுக்கோட்டை மாவட்ட 156 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின் திருவை இயந்திரம் கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை, மார்ச் 1: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின் திருவை இயந்திரங்களை கலெக்டர் கவிதாராமு நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது; மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி 2019-20ன்கீழ், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின் திருவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மனித உழைப்பின் மூலம் தங்களது மண்பாண்ட உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வரும் மக்களின் உற்பத்தித் திறன் மேம்படுவதுடன், அதிக எண்ணிக்கையிலான பொருட்களையும் உயர் தரத்துடன் உற்பத்தி செய்ய முடியும். இவர்களால் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் அனைத்தும் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இயலும்.அதனடிப்படையில் கறம்பக்குடி, திருவரங்குளத்தை சேர்ந்த 156 பயனாளிகளுக்கு ரூ.40.20 லட்சம் மதிப்பிலான விலையில்லா மின்திருவை இயந்திரங்கள் வழங்கப்பட்டது. அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களது தொழிலை சீரிய முறையில் மேற்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி செயலர் லெட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுல கிருஷ்ணன், ஆயிஷாராணி, ஹரிஷ்மாலை கல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pudukkottai District Collector ,
× RELATED புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்...