×

லாரி மோதி தொழிலாளி பலி

திருச்சுழி, பிப். 26: திருச்சுழி அருகே உள்ள குலசேகர நல்லூரைச் சேர்ந்த வேல்முருகன்(40) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ராமசாமி நகரிலிருந்து குலசேகரநல்லூருக்கு டூவீலரில் சென்றார். அப்ேபாது அருப்புக்கோட்டையில் இருந்து மேலகண்டமங்கலம் தனியார் மாவு மில்லுக்கு பாலைவனத்தை சேர்ந்த மாரியப்பன்(57) ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில் வேல்முருகன் மீது சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்த கிராமமக்கள், லாரி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வரும் வரை பிணத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். கிராம பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் ,வேகத்தடை அமைக்க கோரியும் பொதுமக்கள் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி