×

அமமுக, சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர்

சிவகங்கை, பிப். 26: பிப்.19 அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22ல் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக, அமமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவில் சேர்ந்து வருகின்றனர்.

சிவகங்கை நகராட்சி 24வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீதாகார்த்திகேயன், 16வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுபைதாசீமான் ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர் செயலாளர் துரை ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் இருந்தனர்.இதன் மூலம் சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக கூட்டணியின் பலம் 21 ஆக உயர்ந்தது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி 8வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்சூர்அலி ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அப்போது திமுக நகர் செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags : AIADMK ,Independents ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...