×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வாழ்த்து

திருப்பூர், பிப்.26:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வார்டு 38, 39, 40, 41, 53, 54, 57, 58, 59 மற்றும் 60 ஆகிய 10 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 10 வேட்பாளர்களும், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதில் திருப்பூர் மாநகராட்சியின் 41-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான இல.பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : government ,Minister ,MB Saminathan ,
× RELATED தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது...