சிவகாசி, பிப். 25: திருத்தங்கல்லில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் சிவகாசி சிவன் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.இதே போன்று விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்விழாவில் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், லட்சுமிநாராயணன் கட்சி நிர்வாகிகள் பலராம், தெய்வம், சீனிவாசகபெருமாள், கருப்பசாமிபாண்டியன், பாண்டியராஜன், அ.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.