×

கோட்டைப்பட்டினத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து மீன் பிடிக்க சென்ற சுந்தரபாலு என்பவர் கடலில் தவறி விழுந்து விட்டார். தொடர்ந்து அவரை தேடும் பணியில் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கடல் பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுந்தரபால் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது சடலமாக கடலில் மிதந்து கொண்டிருந்த உடல் சுந்தரபாலு என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுந்தரபாலுவின் உடல் படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது பின்னர் இதுகுறித்து கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழுமத்தினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kottaipattinam ,
× RELATED இலங்கை தாக்குதலினால் இறந்த 4 மீனவர்கள்...