×

சாத்தான்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து


சாத்தான்குளம்,  பிப். 25:சாத்தான்குளம்  பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் கனிமொழி எம்பி,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். சாத்தான்குளம்  பேரூராட்சி தேர்தலில் 9 வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வடக்கு ஒன்றிய செயலாளர்  ஜோசப், ரெஜினி ஸ்டெல்லாபாய், ஜான்சிராணி, கற்பகவள்ளி, மகேஸ்வரி, இந்திரா,  ஸ்டேன்லி, மாரியம்மாள், தேவனேசம் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் சுந்தர்,  லிங்கபாண்டி ஆகியோர் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து தமிழக  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து  பெற்றனர். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவிடமும் வாழ்த்து  பெற்றனர். அப்போது சண்மு கையா எம்எல்ஏ., சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர்  பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, மாவட்ட  பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, ஒன்றிய பொருளாளர் வேல்துரை, ஒன்றிய துணை  செயலாளர் மாரியப்பன், முதலூர் ஊராட்சி தலைவர் பொன்முருகேசன்,  நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய வர்த்தக  பிரிவு அமைப்பாளர் சண்முகசுந்தரம், மணிகண்டன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்  உடனிருந்தனர். 

Tags : Sathankulam ,Municipal Councilors Minister ,Anita Radhakrishnan ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...