×

ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பின் போது பெண் இறந்த வழக்கில் 2 பேர் கைது

ரிஷிவந்தியம், பிப். 25:ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பின்போது பெண் இறந்த வழக்கில், மருந்தக உரிமையாளர் மனைவி உள்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மனைவி செல்வி (30). இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கருக்கலைப்பு செய்ய முடிவு செய்த செல்வி, ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் உள்ள மருந்து கடையை அணுகியுள்ளார். தொடர்ந்து மருந்து கடை உரிமையாளரின் வீட்டில் கடந்த 22ம் தேதி இரவு செல்விக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு செல்வி உயிரிழந்தார். தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சட்டவிரோத கருக்கலைப்பு சிகிச்சை அளித்த மருந்தக உரிமையாளர் மணிகண்டன், அவரது மனைவி முத்துகுமாரி மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முத்துகுமாரி, கவிதா ஆகியோரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.

Tags : Rishivandiyam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...