×

பண்ருட்டி அருகே பள்ளி மாணவி கடத்தல் கூலித்தொழிலாளி கைது

பண்ருட்டி, பிப். 25:   பண்ருட்டி அருகே வேலங்குப்பத்தை சேர்ந்தவர் பிளஸ்2 மாணவி. கடந்த 21ம் தேதி பள்ளி செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஜோதி மகன் பாலையா(19), கூலி தொழிலாளி என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான குழுவினர் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்த பாலையா மற்றும் பள்ளி மாணவி இருவரையும் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் அதிரடியாக மீட்டார். இதில் பிளஸ்2 மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பாலையாவை போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு