சேத்தியாத்தோப்பு, பிப். 25: கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்டதும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள மேலத்தெருவில் உள்ள சாலை 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழமையான சாலையானதாலும் மழையால் தார்சாலை மண்அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியமாக மாறியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலையின் நிலை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலை சீரமைக்கபடவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுத்தியுள்ளனர்.