×

போடி பகுதியில் பேவர்பிளாக் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

போடி, பிப். 24: போடி அர்பன் வங்கி தெருவில் பேவர்பிளாக் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி காமராஜர் சாலையில் காவல் நிலையம் எதிரில் தினசரி மார்க்கெட் செல்லும் இரு வழிகளில் பல்வேறு அத்தியாவசிய கடைகள் வரிசையாக உள்ளது. இப்பாதையின் நுழைவின் ஒரு பகுதியில் 10 மற்றும் 11 என 2 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிமை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக அர்பன் வங்கி தெரு மேற்படி கடைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்த வங்கிச்சாலையில் கடந்த ஒரு மாதமாக பேவர்பிளாக் சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த பணிகள் படுமெத்தனமாக நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலைப்பணிக்கா ஒரு நாள் மண்ணை கொட்டுகின்றனர்.

அதன்பின் கற்களை கொட்டுகின்றனர். சாலையை மறித்து கயிற்றையும் கட்டி விடுகின்றனர். இதனால், பரமசிவன் கோயில் ரோட்டு பகுதியில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. ரேஷன் கடைக்கும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, போடி நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதி சாலைப்பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Powerblock Road ,Bodi ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது