×

துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் கைது

துவரங்குறிச்சி, பிப். 24: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த புத்தாநத்தம் அருகில் கம்பிளியம்பட்டியில் உள்ள ஆற்று வாரிப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புத்தாநத்தம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி(54), கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த துரைராஜ்(45) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் மணல் அள்ளப் பயன்படுத்திய டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tuvarankurichi ,
× RELATED துவரங்குறிச்சி அருகே விவசாயத்திற்கு...