×

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

தூத்துக்குடி, பிப்.22:வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை முன்னிட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள், கடையுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்எல்2, எப்எல்3 உரிம தலங்களில் அமைந்துள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்வதோ, பார்கள் திறப்பதோ இப்பகுதிகளில் மதுபாட்டில்களை எடுத்து செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tasmag ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு...