×

தில்லையாடியில் மாற்றுத்திறனாளிக்கு குடும்ப அட்டை

தரங்கம்பாடி, பிப்.22: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார். தில்லையாடி சவுக்கடி தெருவை சேர்ந்தவர் ஜீவிதா. இவர் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும் முத்துகுமரன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஜீவிதா திருமணத்திற்கு பின் தன் குடும்பத்தின் குடும்ப அட்டையில் உள்ள தனது பெயரை நீக்கி விட்டு புதிதாக குடும்ப அட்டை வழங்க விண்ணப்பதிருந்தார். அவர் விண்ணப்பத்தை பரிசீலித்த தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஜீவிதா மற்றும் அவரது கணவர் முத்துகுமரனின் பெயர்களை அவர்களது குடும்ப அட்டையில் இருந்து நீக்கி விட்டு புதிய குடும்ப அட்டையை மாற்றுத்திறனாளி ஜீவிதாவிடம் வழங்கினார்.

Tags : Thillaiyadi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும்