×

செம்பனார்கோயில் அருகே அரசு பஸ் சென்டர் மீடியனில் மோதியதில் 3 பேர் படுகாயம்

செம்பனார்கோயில், பிப்.22: செம்பனார்கோயில் அருகே அரசு பஸ் ெசன்டர் மீடியனில் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். புதுச்சேரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் நேற்று முன்தினம் அதிகாலை நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  பஸ்சை, நாகை மாவட்டம் திட்டச்சேரி திருமருகளை சேர்ந்த ஞானசேகரன் மகன் ஸ்டாலின் என்பவர் ஓட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கருவிழந்தநாதபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் (சென்டர் மீடியன்) அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்சின் முன்பகுதி நசுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன், நரிமணத்தை சேர்ந்த பெர்லின், நன்னிலம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  சம்பவம் குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Median ,Sembanarkoil ,
× RELATED நாகர்கோவிலில் சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி