×

மேற்கூரை பழுதடைந்த அங்கன்வாடி மையம்கலெக்டரிடம் புகார் மனு

போச்சம்பள்ளி, பிப்.22:கிருஷ்ணகிரி கேஆர்பி உபரிநீர் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன் பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவேரிப்பட்டணம் ஒன்றியம், மாரிச்செட்டிஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பெற்றோர், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 2015-16ல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ₹42 ஆயிரம் மதிப்பில் கட்டிடத்தை புதுப்பித்தனர். தற்போது அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை மீண்டும் பழுதடைந்து, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. மேற்கூரை விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, பழுதடைந்த மையத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anganwadi Center Collector ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு