×

எஸ்எஸ்ஐ பதவி விருதுநகர் மாவட்டத்தில் 143 பேரின் பட்டியல் ெரடி

அருப்புக்கோட்டை, பிப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 143 தலைமைக்காவலர்களை சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து 25 வருடங்களான தலைமை காவலர்களை சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. ஏப்ரல் மாதம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் தலைமைகாவலர்கள் 143 பேர் பட்டியல் தயார் செய்துள்ளனர். இப்பட்டியலில் எவரேனும் விடுபட்டிருந்தால் அல்லது பணிமாறுதல் பெற்றிருந்தால் அந்த விபரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பதவி உயர்வில் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் ராஜ்குமார், முத்துக்கருப்பசாமி, சோலையாண்டவர், முனியசாமி, குருமூர்த்தி, கந்தசாமி, நாகேந்திரன், மனோகரன், மலையரசன், செல்வக்குமார், உமாசங்கர்,சீனிவாசன், கிரிஜா உட்பட 17 பேர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : SSI ,Virudhunagar district ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்