×

திண்டுக்கல் மாநகராட்சி 21வது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.கார்த்திக் வாக்குறுதி

சின்னாளபட்டி, பிப். 18: திண்டுக்கல் மாநகராட்சி 21வது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜெ.கார்த்திக் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன், 21வது வார்டு பொறுப்பாளர் பண்ணைப்பட்டி அருண் ஜெகநாதன், கலாதேவி தலைமையில் சௌராஷ்டிராபுரம் விஸ்தரிப்பு, சௌராஷ்டிராபுரம் காலனி, இ.பி.காலனி, ஸ்பென்சர் காம்பவுண்டு, மெங்கில்ஸ் ரோடு பகுதியில் சுமார் 500 பேருடன் வீதிவீதியாக சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவருக்கு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு தங்கள் வாக்கு கை சின்னத்திற்கே என உறுதியளித்தனர். பின்னர் வாக்காளர் மத்தியில் வேட்பாளர் ஜெ.கார்த்திக் பேசுகையில், ‘அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். 21வது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என்றார். பிரசாரத்தில் திமுகவை சேர்ந்த அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.

Tags : Congress ,J. Karthik ,Dindigul Corporation ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...