×

2ம் ஆண்டு நினைவு தினம் பூண்டி கலையரசன் படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

திருவாரூர், பிப்.18: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி திமுக பேரூர் கழக செயலாளர் பூண்டி கலையரசன் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் மறைந்த பூண்டி கலைச்செல்வன் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் ஆகியோரது சகோதரரும், கொரடாச்சேரி பேரூராட்சியின் திமுக செயலாளராக இருந்து வந்தவருமான பூண்டிகலையரசன் கடந்த 2220ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.இதனையடுத்து அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் திமுகவினர் மூலம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரடாச்சேரியில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை தலைவருமான பாலச்சந்தர், வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான புலிவலம் தேவா, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோமசெந்தமிழ்ச்செல்வன், கொரடாச்சேரி ஒன்றிய பெருந்தலைவர் உமாபிரியாபாலச்சந்தர், பேரூர் கழக செயலாளர் யுவராஜ் மற்றும் திருவாரூர் நகர செயலாளர் வாரைபிரகாஷ் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பூண்டி கலையரசன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



Tags : DMK ,Poondi Kalaiyarasan ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...