×

திசையன்விளையில் திமுக கூட்டணியை ஆதரித்து நெல்லை மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தீவிர பிரசாரம்

திசையன்விளை, பிப். 18: திசையன்விளை பேரூராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தலைமையில் நேற்று நடந்தது.
 திசையன்விளை நேருஜி கலையரங்கம், காமராஜர் சிலை அருகே, அற்புத விநாயகர் கோயில் பகுதிகளில் நடந்த கூட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து விஎஸ்ஆர் ஜெகதீஸ் பேசுகையில் ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சி, திசையன்விளை பேரூராட்சியிலும் அமைந்திட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். திசையன்விளை பகுதிகளில் வீடு இல்லாதவர்களில் முதற்கட்டமாக 1000 பேருக்கு விரைவில் இலவச வீடுகள் கட்டப்படும். 1 சென்ட் மற்றும் 2 சென்ட் நிலம் வைத்துள்ளோரில் 1000 பேருக்கு மானியத்தில் வீடுகள் கட்டப்படும். திசையன்விளை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்’’ என்றார்.

 பிரசாரத்திற்கு திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ராஜன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெனிபர் தினகர், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி, அமைச்சியார், தொண்டர் அணி மாவட்ட  துணை அமைப்பாளர் தனபால், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரோஜா, ஆதிதிராவிடர் நலகுழு மாவட்ட துணை அமைப்பாளர் மூர்த்தி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜோசப், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், ஊராட்சி தலைவர்கள் முருகன், பொன் மீனாட்சி  அரவிந்த், மணிகண்டன், மகேஸ்வரன், ராதிகா சரவணகுமார், ஊராட்சி துணைத்தலைவர் பலவேசம், முன்னாள் ஊராட்சி செயலாளரகள் கோவிந்தராஜ், கல்கண்டு, தில்லை ராஜா, அல்போன்ஸ், அந்தோனி, தொண்டர் அணி சங்கர், திசையன்விளை நடராஜன், நசுருதீன், குமார், எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, முத்தையா, டென்னிஸ், கோகுல் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Nellai District Panch ,DMK ,Thisayanvilai ,VSR Jagadeesh ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்