×

சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முழுமையாக செயல்பட நடவடிக்கை

சாத்தான்குளம், பிப். 18: சாத்தான்குளம் பேருராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வீதிவீதியாக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். பழைய பஸ் நிலையத்தில் பிரசாரத்தை துவக்கி அவர் பேசுகையில் ‘‘தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் நோக்கில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சாத்தான்குளத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அரசு போக்குவரத்து கழக பணிமனை  முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக பஸ்கள் இயக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில்  அனைத்து புதிய குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். பேரூராட்சிக்கு அனைத்து வளர்ச்சி திட்டங்களும் பெற்றுத் தரப்படும்’’ என்றார்.

தொடர்ந்து பஜார், இட்டமொழி சாலை, காமராஜர் நகர், தெற்குரத வீதி, பண்டாரஞ்செட்டிவிளை, முதலூர் சாலை, மாணிக்கவாசகபுரம், ஜெபஞானபுரம், உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வாக்குசேகரித்தார். பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், நகர செயலாளர் மகா இளங்கோ, காங். வட்டார தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, லூர்துமணி, மாவட்ட காங். துணை தலைவர்சங்கர், பொருளாளர் காங்கிரஸ் எடிசன், நகர தலைவர் வேணுகோபால், துணை தலைவர் கதிர்வேல், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜோசப் அலெக்ஸ், மகிளா பிரிவு நகர தலைவி ராணி,  திமுக பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, முதலூர் ஊராட்சி தலைவர் பொன்முருகேசன், நடுவக்குறிச்சி முன்னாள் தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய பொருளாளர் வேல்துரை, நகர துணை செயலாளர் வெள்ளப்பாண்டி, பொருளாளர் சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் முருகன், மருத்துவ பிரிவு ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ்மதுரம், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ்பிரிட்டோ, ஸ்டான்லி, சரவணன் உள்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : Government Transport Corporation ,Sathankulam ,
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்