×

உலக அமைதிக்காக சிறப்பு பூஜை கண்ணமங்கலம் அடுத்த அத்திமலைப்பட்டில்

கண்ணமங்கலம், பிப்.18: கண்ணமங்கலம் அடுத்த அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள தாதுகிரி சித்தர் மடத்தில் மாசி மகத்தையொட்டி உலக அமைத்திக்காக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி காலை சிவனடியார்கள் நாகநதி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து, தாதுகிரி சித்தருக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்களை பாடி சித்தரை வழிப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து கோயில் உள் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாககுண்டத்தில் உலக மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளிலிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்தும், போர் அபாயங்களிலிருந்தும் விடுபட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தரை வழிப்பட்டனர்.

Tags : Attimalaipattu ,Kannamangalam ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே