ஆண்டிபட்டி, பிப். 17: ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையக்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வல்லப பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வர பூஜையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு இரவில் தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம் முடிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின் பல புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து மூலவர்கள் விநாயகர் மற்றும் தேவி பூதேவி சமேத வல்லவர் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.