×

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட கருணாஸ் மனு


சாயல்குடி, பிப்.17:  மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சார்பில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங்கிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் கூறும்போது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்தியா விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர். தொகுதிக்கே செல்லாமல் எம்.எல்.ஏ, எம்.பி ஆனவர். சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு அரசு ஆண்டு தோறும் அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சங்கள் செலவழித்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர். எனவே மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். எனது கோரிக்கை வலியுறுத்தி, விமான போக்குவத்து துறை அமைச்சர் வி.கே.சிங்கை, முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்துராமலிங்கம், துணை செயலாளர் பெருமாள் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்றார்.

Tags : Karunas ,Madurai Airport ,
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்